Wednesday, May 6, 2009

கிளிநொச்சியில் சிங்களவனால் இறக்கப்பட்ட புலிக்கொடி இன்று உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது; நான் புலிதான்: இயக்குனர் சீமான் ஆவேசப்பேச்சு

கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.
இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர் சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.
இதன்போது அவரது உரையில்,
இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது.
காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே! யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான். புலிகள்தான்!
கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது.
பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.
இத்தாலி சோனியாவை "பாரதத்தின் அன்னை" என்று அழைக்கும்போது, என் சொந்த இரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன்.
சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவன், பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறான், தன் புகழை வளர்க்க சண்டை போடுகிறான். இப்படி அவரைப் பற்றி எத்தனை அவதூறுகள். பொய் பழிகள். ஆனால் அத்தனையையும் பிரபாகரன் எனும் பெரு நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிடும் என்பதை இவர்களுக்கு காலம் புரியவைக்கும்.
நான் உணர்ச்சிவசப்படுவதாகக் கூறினார்கள். எனக்கு உணர்ச்சி இருக்கு, வசப்பட்டு பேசறேன். பிரபாகரன் நாடு கேட்டது அவருக்காகவா. உனக்கும் எனக்கும்.இந்த ஒட்டுமொத்த தமிழினத்துக்குமல்லவா. இறையாண்மை பற்றிப் பேசுகிறோமே. தவிச்ச வாய்க்கு பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணி தருகிறானா இந்த நாட்டிலே. எங்கே இருக்கிறது உனக்கான உரிமை?
தமிழகக் கடலில் மீன் பிடிக்க தமிழனுக்கு உரிமை இல்லை. எங்கள் மீனவனுக்கு சொந்தமான கச்சதீவை யாரைக் கேட்டு தாரைவார்த்துக் கொடுத்தீர்கள்?
430 தமிழ் மீனவனை சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்களர்கள். அதை ஏன் என்று கேட்க நாதியில்லை.அப்புறம் எங்கே வந்தது இறையாண்மை? எனக்கு இறைவனுமில்லை. இறையாண்மையுமில்லை.
தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்..சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க...
அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேல் என்பதை நம்புபவர்கள் நாங்கள். 'மதுக்கடையிலும், திரையரங்க வாசல்களிலும் கூட்டம் கூட்டமாய் நின்று உணர்வை இழந்து கொண்டிருக்கும் என் சகோதரர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையே' என என்னிடம் வருத்தப்பட்டுக் கூறினார் அண்ணன் பிரபாகரன்.
கடலுக்கு அப்பால் உள்ள தமிழனும் சாகிறான். இந்தப் பக்கம் உள்ள தமிழனும் சாகிறான். நாதியத்துப் போன கூட்டமாகி விட்டோமே என்ற ஆற்றாமை என்னை பாடாய்படுத்துகிறது...
திபெத்திய தலாய்லாமாவுக்கு ஒரு நியாயம், ஈழத்துப் பிரபாகரனுக்கு ஒரு நியாயமா.பங்களாதேஷைப் பிரித்துக் கொடுக்க ஒரு நியாயம், தனி ஈழம் உருவாவதைத் தடுக்க ஒரு நியாயமா.
10 ஆண்டுகள் போராடி 3000 உயிர்களை இழந்த கொசோவோ இன்று தனிநாடு. ஆனால் அரை நூற்றாண்டுப் போர். இலட்சத்தில் உயிர்களை இழந்த ஒரு நாட்டை தனி நாடு என அங்கீகரிக்க ஏன் தயக்கம். நண்பர்களே! பிரபாகரன் வேறு நாட்டை பிரித்துக் கேட்கவில்லை.
காலகாலமாக, நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் பண்டார வன்னியன் காலத்திலிருந்து அரசாண்டு வந்த தன் சொந்த மண்ணை அந்நியர்களிடம் இழந்துவிடாமலிருக்கப் போராடுகிறான்.
இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது. ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், இராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து. என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ்.
அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும். நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்’’ என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

Wednesday, April 29, 2009

DRINK WATER ON EMPTY STOMACH



It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven a its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases: Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases. METHOD OF TREATMENT 1. As you wake up in the morning before brushing teeth , drink 4 x 160ml glasses of water .....interesting 2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minutes ..... kastam than3. After 45 minutes you may eat and drink as normal. 4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours 5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day. 6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life. The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases: 1. High Blood Pressure - 30 days 2. Gastric - 10 days 3. Diabetes - 30 days 4. Constipation - 10 days 5. Cancer - 180 days 6. TB - 90 days 7. Arthritis patients should follow the above treatment only for 3 days in
the 1st week, and from 2nd week onwards - daily. This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times. It is better if we continue this and make this procedure as a routine work in our life. Drink Water and Stay healthy and Active. This makes sense .. the Chinese and Japanese drink hot tea with their meals ..not cold water. maybe it is time we adopt their drinking habit while eating!!! Nothing to lose, everything to gain... For those who like to drink cold water, this article is applicable to you. It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal. A serious note about heart attacks: Women should know that not every heart attack symptom is going to be the left arm hurting. Be aware of intense pain in the jaw line. You may never have the first chest pain during the course of a heart attack. Nausea and intense sweating are also common symptoms. 60% of people who have a heart attack while they are asleep do not wake up. Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive... A cardiologist says if everyone who gets this mail sends it to everyone they know, you can be sure that we'll save at least one life. Please be a true friend and send this article to all your friends you care about,bannedI just did!


















Monday, April 13, 2009

அம்மாவின் அன்பு!!!

உனக்கு ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய்.

உனக்கு இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய்.

உனக்கு மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய்.

உனக்கு நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய்.

உனக்கு ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய்.

உனக்கு ஆறு வயதானபோது அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். நீயோ போகமாட்டேன் என்று அழுதாய்.

உனக்கு ஏழு வயதாகையில் உனக்கு கிரிக்கெட் பந்து வாங்கித் தந்தாள். நீயோ அதைக் கொண்டு அடுத்த வீட்டு சன்னலை உடைத்தாய்.

உனக்கு பத்து வயதாகையில் உன்னை ஆசையுடன் இசைப் பயிற்சிக்கு அனுப்பினாள். நீயோ பயிற்சியெடுக்காமல் நன்றி செலுத்தினாய்.

உனக்குப் பதினொன்று வயதாகையில் உன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாய் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றாள். நீயோ அவளை வேறு இருக்கையில் அமரச் சொன்னாய்.

உனக்குப் பன்னிரண்டு வயதாகையில் பார்க்காதே என்று சொன்ன தொலைக்காட்சி சானல்களை அவள் இல்லாதபோது பார்த்தாய்.

உனக்குப் பதிமூன்று வயதாகையில் தலை முடியை கத்தரிக்கச் சொன்னாள். நீயோ உனக்கு ரசனையே இல்லை என்று பதில் சொன்னாய்.

உனக்குப் பதினான்கு வயதாகையில் பள்ளியில் ஒருவார சுற்றுலா அனுப்பினாள். நீயோ ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாமல் அவளை நிராகரித்தாய்.

உனக்குப் பதினைந்து வயதாகையில் அலுவலகத்திலிருந்து ஆர்வமுடன் ஓடி வந்து உன்னை அழைக்கையில் அறையைத் தாழிட்டுக் கொண்டு பேசாமல் இருந்தாய்.

உனக்குப் பதினாறு வயதாகையில் உனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். நீ அவளுடைய வாகனத்தை சொல்லாமலேயே எடுத்துக் கொண்டு சுற்றினாய்.

உனக்குப் பதினேழு வயதாகையில் அவள் ஒரு தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பதாய் சொன்னாள். நீயோ தொலைபேசியை கீழே வைக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்தாய்.

உனக்குப் பதினெட்டு வயதாகையில் உன்னுடைய பள்ளி இறுதித் தேர்வு வெற்றிக்காக ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நீயோ அவளை தனியே இருக்க விட்டு நண்பர்களுடன் இரவு முழுதும் கொண்டாட்டம் நடத்தினாய்.

உனக்குப் பத்தொன்பது வயதாகையில் கல்லூரியில் பணம் கட்ட வந்தாள். நீயோ அவளை ரகசியமாய் சந்தித்துப் பேசி அனுப்பினாய், நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்க அவமானப் பட்டாய்.

உனக்கு இருபது வயதாகையில் ? நீ யாரையாவது விரும்புகிறாயா ? என்னும் அவளுடைய கேள்விக்கு, ?இதிலெல்லாம் தலையிடாதே? என்று பதில் சொன்னாய்.

உனக்கு இருபத்து ஒன்று வயதாகையில் உன்னுடைய எதிர்காலம் பற்றி அறிவுரை சொன்னாள். நீயோ எனக்கு உன்னைப் போலாக வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாய்.

உனக்கு இருபத்து இரண்டு வயதாகையில் உன் கல்லூரி வெற்றிக்காய் பெருமிதப்பட்டாள். நீயோ நண்பர்களுக்கு விருந்து வைக்க பணம் வேண்டும் என்றாய்.

உனக்கு இருபத்து மூன்று வயதாகையில் பாசத்தோடு உனக்களித்த பரிசைக் குறித்து ?நல்லாவே இல்லை? என்று நண்பர்களிடம் சொன்னாய்.

உனக்கு இருபத்து நான்கு வயதாகையில் உன்னுடைய தொழில் திட்டம் பற்றிப் பேசினாள். அம்மா சும்மா இருப்பாயா என்று அதட்டி உன் நன்றியைக் காட்டினாய்.

உனக்கு இருபத்து ஐந்து வயதாகையில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழித்து திருமணம் செய்து வைத்து கண்ணீர் விட்டாள். நீயோ அவளை விட்டு தூரமாய் வந்து தனிக்குடித்தனம் செய்தாய்.

உனக்கு முப்பது வயதாகையில் உன் குழந்தை வளர்ப்பு குறித்து சில ஆலோசனைகள் சொன்னாள். நீயோ ? அதெல்லாம் அந்தக் காலம்?? என்று பதில் சொன்னாய்.

உனக்கு நாற்பது வயதாகையில் உன்னை அழைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு வர முடியுமா என்றாள். நான் ரொம்ப வேலையாய் இருக்கிறேன் என்று பதில் சொன்னாய்.

உனக்கு நாற்பத்தைந்து வயதாகையில் உன்னைக் காணவேண்டும் என்று விரும்பினாள் நீயோ குழந்தைக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்று பதில் சொன்னாய்.

உனக்கு ஐம்பது வயதாகையில் அவள் நோய்வாய் பட்டாள். உன் கரத்தைப் பிடித்துக் கொண்டே அருகில் இருக்க ஆசைப்பட்டாள். நீயோ முதியோர் இல்லத்தில் சேர்க்க ஆலோசனை செய்தாய்.

ஒருநாள் விடியலில் உனக்கு அழைப்பு வந்தது. உன்னைக் காணவேண்டும் என்னும் ஆசையை முனகலாய் உச்சரித்துக் கொண்டே இறந்து போன உன் தாயைப் பற்றி. நீ காலம் கடந்து கண்ணீர் விட்டாய் !

அன்பு பெரிய பெரிய செயல்களில் வெளிப்படுவதில்லை.
சின்னச் சின்ன நிகழ்வுகளில் தான் வெளிப்படுகின்றன.
காட்டாத அன்பு மலையாய் கனக்கும்
வாய்ப்பு இருக்கும் போதே நேசத்தை வெளிப்படுத்துங்கள்

LOVE & LIFE

This story tells us something about LOVE & LIFE. My husband is S/W Engineer by profession, I love him for his steady nature and I love the warm feeling when I lean against his broad shoulders.
Two years of courtship and now, five years into marriage, I would have to admit, that I am getting tired of it. The reasons of me loving him before, has now transformed into the cause of all my restlessness.I am a sentimental woman and extremely sensitive when it comes to a relationship and my feelings. I yearn for the romantic moments, like a little girl yearning for candy. My husband is my complete opposite; his lack of sensitivity, and the inability of bringing romantic moments into our marriage has disheartened me about LOVE.
One day, I finally decided to tell him my decision, that I wanted a divorce. "Why? " he asked, shocked.
"I am tired. There are no reasons for everything in the world !" I answered.
He kept silent the whole night, seemingly in deep thought. My feeling of disappointment only increased. Here was a man who was not able to even express his predicament, so what else could I expect from him? And finally he asked me:
"What can I do to change your mind?" Somebody said it right... It's hard to change a person's personality, and I guess,
I have started losing faith in him. Looking deep into his eyes I slowly answered: "Here is the question. If you can answer and convince my heart, I will change my mind. Let's say, I want a flower located on the face of a mountain cliff, and we both are sure that picking the flower will cause your death. Will you do it for me?"
He said: " I will give you your answer tomorrow...." My hopes just sank by listening to his response.
I woke up the next morning to find him gone, and saw a piece of paper with his scratchy handwriting underneath a milk glass, on the dining table near the front door, that goes.... My dear, "I would not pick that flower for you, but....please allow me to explain the reasons further.....
This first line was already breaking my heart. I continued reading. "When you use the computer you always mess up the Software programs, and you cry in front of the screen. I have to save my fingers so that I can help to restore the programs. You always leave the house keys behind, thus I have to save my legs to rush home to open the door for you. You love traveling but always lose your way in a new city. I have to save my eyes to show you the way. You always have the cramps whenever your "good friend" approaches every month. I have to save my palms so that I can calm the cramps in your tummy. You like to stay indoors, and I worry that you will be infected by infantile autism. I have to save my mouth to tell you jokes and stories to cure your boredom. You always stare at the computer, and that will do nothing good for your eyes. I have to save my eyes so that when we grow old, I can help to clip your nails and help to remove those annoying white hairs. So I can also hold your hand while strolling down the beach, as you enjoy the sunshine and the beautiful sand...and tell you the colour of flowers, just like the colour of the glow on your young face... Thus, my dear, unless I am sure that there is someone who loves you more than I do... I could not pick that flower yet, and die ... "
My tears fell on the letter, and blurred the ink of his handwriting... And as I continue on reading... "Now, that you have finished reading my answer, and if you are satisfied, please open the front door for I am standing outside bringing your favorite bread and fresh milk...
I rushed to pull open the door, and saw his anxious face, clutching tightly with his hands, the milk bottle and loaf of bread....Now I am very sure that no one will ever love me as much as he does, and I have decided to leave the flower alone... That's LIFE, and LOVE.
When one is surrounded by love, the feeling of excitement fades away, and one tends to ignore the true love that lies in between the peace and dullness. Love shows up in all forms; even in very small and cheeky forms. It has never been a model. It could be the dullest and most boring form ... Flowers, and romantic moments are only used and appear on the surface of the relationship. Under all this, the pillar of true love stands... AND THAT'S LIFE

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்

ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்துவிடாமல் இருக்கஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைஉருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாடநிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச்செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையேவெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும்
மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
***************

"அன்னையர் தினம்"

"அன்னையர் தினம்"
அதிகாலையில்
அழைத்து வாழ்த்துச் சொன்னால்
அன்னையின்
அயர்ந்த தூக்கம் கெட்டுவிடும் என்று
அலுவலகம் சென்றவன்
அனுமதி பெற்று
அவசர அவசரமாகக் காரில்
பறந்துசென்றான்
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்...

ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!

தானம்

"தானம்"
கண்டதை உற்று நோக்கும் கண்களைதானம் செய்!!
காதலுக்காக சிந்தும் ரத்தத்தைதானம் செய்!!
கேளிக்கையில் மிந்தும் உணவைதானம் செய்!!
ஏழைக்கு இலவசமாக கல்வியைதானம் செய்!!
நண்பர்களுக்கு பூப்போன்ற மனதைதானம் செய்!!
உன் பாதிக்கு உண்மையான கற்பைதானம் செய்!!
தந்தையின் உழைப்பிற்கு உன் வெற்றி வாழ்க்கையை தானம் செய்!!
உன்னை சீராட்டி வளர்க்கும் தாய்க்கு சிறிது "நேரமாவது?"தானம் செய்!!
இவையனைத்தும் விளம்பரப்படுத்தாமல் நிதானமாய் செய்!!.......

Friday, February 27, 2009

Walk to Keep fit

In today's fast paced life, people are leading a very unhealthy lifestyle. The increasing rate of health diseases, stress levels, lack or inadequate sleep are caused due to the fast paced life style. People get so engrossed in coming up in life that the forget their health. There is a popular saying 'If wealth is lost, something is lost, but if health is lost, everything is lost". It is the apt time that people start concentrating on their health and well being.

Walking is the most safest start towards exercise routine. Particularly for obese people walking is the most recommended start. To start with always stick to a comfortable speed in which you do not gasp for breath. One should never start to jog immediately take time and seek appropriate medical advice before jogging.

Walking on hills is good. The uphill provides cardiovascular benefits and the downhill is known for reducing the blood sugar levels. Walking on hills may not be possible for all of us due to the location constraints. This can be achieved by using some specifically made Treadmills which allow to simulate the required inclination.

Walking helps burn fat, boosts the energy levels and decreases health risks. Many people whose life style is sedentary or who are obese have very low fitness levels due to lack of exercise. Walking is the ideal exercise start for these kind of people. Walking enables to workout at a steady, which is required to burn fat effectively. To burn fat we need the body to be permanently in fat-burning mode during the whole exercise, walking is a constant and gradual activity so it achieves fat-burning mode very effectively even if the person lacks some fitness.Walking has many health benefits, It can reduce the risk of many diseases like heart attack, stroke, depression, colon cancer, constipation, osteoporosis, and impotence etc. It helps cure sleeplessness.

Listed are some of the benefits of Walking:
Helps overcome depression.
Helps fight against stress and aids in relaxation.
Helps over come sleepless nights.
Helps to increase the body activity and provides flexibility.
Helps toning the body.Helps to burn fat.
Walk to Keep பிட்.

Tuesday, February 10, 2009

காங்கிரசைவிட்டு தன்மானத் தமிழர்களே வெளியேறுங்கள்! - தமிழ்நாடு காங்கிரசைக் கழுவிக் கவிழ்த்துவிட்ட தில்லிக் காங்கிரசு!

காந்தியும் காமராசரும் பெரியாரும் பங்கெடுத்த ஒரு மாபெரும் இயக்கம் பேராயக்கட்சி (காங்கிரசுக் கட்சி)! வெள்ளையருக்கு எதிரான இந்திய தேசிய இயக்கத்தில் பேராயக் கட்சியின் பங்களிப்பு, ஈகம் அளப்பரியது! ஆனால் இந்தியத் துணைக்கண்டம் விடுதலை பெற்று வெள்ளையர் வெளியேறியபோது, இந்தப் பேராயப் பேரியக்கதின் போக்கு கண்டு வெகுண்டெழுந்தவர்களும் வெளியேறியவர்களும் சகித்துக் கொண்டு காலம் தள்ளுபவர்களும் ஏராளம், ஏராளம்! காந்தியடிகளே வெந்து நொந்து சொன்னார், “காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும்” என்று!
இன்றைக்கு மணிசங்கர ஐயர்வாளுக்கு செருப்படியும் கல்வீச்சும், தங்கபாலுவின் ஓராயிரம் உருவப்பொம்மைகளை மக்கள் ஆங்காங்கே எரிப்பதும், காங்கிரசுக் கொடிக் கம்பங்களை வீழ்த்துவதும் அன்றாட நடைமுறையாகி விட்டது. காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. மொத்தத் தமிழர்களின் எதிர்ப்பை வகை தொகையில்லாமல் சம்பாதித்துவிட்டது. காங்கிரசுத் தொண்டரான தியாகி இரவிச்சந்திரன் தீக்குளித்து, உயிரை ஈகம் செய்து காங்கிரசுக் கட்சி செய்யும் துரோகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார். தனிநபர்களின் தன்நலத்திற்காகவும் ஒரு சிலரின் பதவிப் பற்றிற்காகவும் ஈகிகள் சிந்திய ரத்தமும் வியர்வையும் அன்றிலிருந்து இன்றுவரை மதிப்பிழந்து போனதுதான் உண்மை. வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் இந்தியா ஒரு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை மறுத்து தேசிய இனங்களின் கொட்டடியாகவே இதை மாற்றிவிட்டனர். காசுமீரத்தின் வரலாற்றை நாம் ஒரு முறை வாசித்துப் பார்தாலேயே இது புரியும். அவர்கள் பாக்கிசுத்தானுடனோ இந்தியாவுடனோ இணைய விரும்பாது தனியொரு நாடாகவே இருக்க விரும்பினார்கள். ஆனால், நேருவோ காசுமீரத்துக்காரர்! காசுமீர் போய்விட்டால் நேரு எப்படி தலைமையமைச்சராக இயலும்? நேருவிற்குப் பின் நேருவின் குடும்பத்தாரின் கொற்றமே கோலோச்சியது.. இன்றைக்கு பேராயப் பேரியக்கத்தையே எப்படி மாற்றிவிட்டார்கள் என்றால், பிரியங்காவிற்குக் குழந்தை பிறந்துவிட்டதா? என்று ஏங்கித் தவிக்கும் ஒரு மட்டமான கொத்தடிமைக் கூட்டமாகவே அதை மாற்றிவிட்டார்கள். காசுமீர விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க இன்று கோடிக்கணக்கான பணத்தை நாள்தோறும் கொட்டி நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பெரியதொரு முட்டுக்கட்டையை நாம் போட்டு வைத்துள்ளோம்! இந்திராகாந்தி! பின்னர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் நாட்டின் தலைமையமைச்சர் ஆனார். அவருக்கு முன்பாக திரு. இலால் பகதூர் சாஸ்த்திரி அவர்கள் சில மாதங்கள் தலைமையமைச்சராக இருந்தார். மிக எளிமையானவர். அவருடைய மரணம் குறித்து இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இருக்கின்றன. தாஷ்கண்ட் சென்ற அவர் எப்படி மரணத்தைச் சந்தித்தார்? என்பது குறித்து இன்னும் குழப்பம் நிலவுகிறது. பின்னர் நடந்த நகர்வாலாப் படுகொலை! தேர்தல் செலவுகளுக்காக பணம் சேர்க்கும் இழிபோக்கிற்கு போட்ட பிள்ளையார் சுழி அது. திருமதி இந்திரா காந்தி அவர்களின் மரணத்தையொட்டி தில்லியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடந்த சீக்கியர் படுகொலை, கொள்ளை, கற்பழிப்புகள் இந்தப் பேரியக்கம் எப்படி ஓர் உதிரி நிலைக்கு உருமாறியிருக்கிறது என்பதை மெய்ப்பித்தது! மத்திய அமைச்சராகயிருந்த செகதீசு டைட்லர் போன்ற காங்கிரசுத் தலைவர்கள் நடுத்தெருவில் நின்றுகொண்டு அப்பாவிச் சீக்கியர்களை கொன்றொழித்த கொடுமைகளுக்கு வழிநடத்தினார்கள் என்ற உண்மை உள்ளத்தை உலுக்குகிறது. குசராத் படுகொலைகள், ஒரிசாப் படுகொலைகள் என்று சங்கப்பரிவார அமைப்புகளின் படுபாதகச் செயல்களைக் குறித்து நாம் ஒப்பாரி வைக்கிறோம். பேராயப் பேரியக்கம் எந்த வகையிலாவது இதிலிருந்து மாறுபட்டதா? என்று சிந்தியுங்களேன். இந்திராகாந்தி அவர்கள் இருக்கும்போதே அவருடைய சின்ன மகன் சஞ்சய் காந்தி அவர் விருப்பம்போல நடந்துகொண்டார். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு போன்ற குதர்க்கமான செயற்பாடுகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு காட்டுத் தர்பாரே நடத்தினார். அவரும் ஐயத்திற்கிடமான விதத்தில்தான் ஒரு வானூர்தி நேர்ச்சியில் காலமானார். அதிலும் சந்திராசாமியின் தொடர்பு என்ன? என்பது அவிழ்க்க முடியாத முடிச்சாகவே இன்னும் இருக்கிறது. இராசீவ் காந்தி பின்னர் இராசீவ் காந்தி வந்தார். “இழுத்து வரப்பட்டார்!” என்றே வைத்துக் கொள்ளுங்கள். இத்தாலியப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டவர். நாட்டின் பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட பீரங்கிப் பேர ஊழலில் கோடிக்கணக்கான இந்தியர்களின் வரிப்பணம் குவத்ரோச்சி என்கிற இத்தாலியரின் கைகளில் விழுந்துவிட்டதற்கும் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு நடுநலைமைவாதியாக நின்று சிந்தியுங்களேன். தமிழர்களும் பேராயக்கட்சியும் அந்தக் காலத்திலிருந்து இந்தக்காலம் வரை வடவர்களுக்குக் குற்றேவல் செய்யும் ஓர் அமைப்பாகவே தமிழகப் பேராயக்கட்சி இருந்திருக்கிறது. காமராசரைக் கிங்மேக்கர் என்று சொன்னார்களே தவிர கிங் ஆக்கவில்லை. மூப்பனாருக்கும் வாய்ப்பு வந்தது. அதுவும் தேவகவுடாவிற்கு தாரை வார்க்கப்பட்டதே தவிர தமிழர் ஒருவரை வரவிடக்கூடாது என்பதில் (கருணாநிதி உட்பட) தமிழரல்லாதவர்கள் அனைவரும் கவனமாகவே இருந்தார்கள். திரு. இராசீவ் காந்தி அவர்கள் இலங்கைக்கு இந்திப் படைகளை அனுப்பி அங்கு ஏறத்தாழ பத்தாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்ததை நாம் எந்த வகையிலாவது ஞாயப்படுத்துகிறோமா? அந்த அமைதிப் படைகள் 31 மாதங்கள் அங்கு அட்டகாசம் செய்துவிட்டுத் தலை குனிந்து இந்தியா திரும்பியபோது இன்றைய முதல்வரான கருணாநிதி அன்றைக்கும் முதல்வராக இருந்தார். படைகள் சென்னை வந்திறங்கியபோது அவர்களை வரவேற்க மறுத்துவிட்டார்! எவ்வளவுதான் நாம் மூடி மறைத்தாலும், அடக்கி அமுக்கினாலும் உண்மைகள் சாகாது என்பதற்குத் தமிழீழமும் தமிழகமும் இன்று கிளர்ந்தெழுவதிலிருந்தே தெரிகிறது. இராசீவ் காந்தி அவர்களின் கொலையை நாம் ஞாயப்படுத்தவில்லை! ஆனால், ஓர் உண்மைக் காங்கிரசுத் தொண்டனாகச் சிந்தியுங்கள். அவரது படுகொலை குறித்து இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கின்றன. பல ஊடகங்களும், தலைவர்களும் நாயாய் பேயாய் கத்தினாலும் அந்த உண்மைகள் குறித்து ஆய்ந்தறிய யாரும் முன்வராதது ஏன்? அவிழாத முடிச்சுகள்! 1. கொலையில் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி, நரசிம்மராவு போன்றவர்களின் தொடர்பு என்ன? 2. ஒற்றைக்கண் சிவராசனின் தாயார் ஒரு சிங்களவர் என்பதும் கொலையில் ஈடுபட்டவர்கள் புலிகள் இயக்கத்திலிருந்து விலகியவர்கள் என்பதும் உண்மையில்லையா? ஏற்கெனவே ஒரு சிங்கள படைவீரன் துப்பாக்கியால் அடித்து இராசீவைக் கொலை செய்ய முயன்றது உங்களுக்குத் தெரியாதா? அவன் இன்று சிங்கள இனவெறிக் கட்சி ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையில்லையா? 3. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தவறான புரிதலின் அடிப்படையில், தான் தவறான முடிவு எடுத்துவிட்டதாகவும் அதை தான் பதவியேற்றதும் சரி செய்வதாகவும் மறைந்த புலிகளின் தலைவர் கிட்டு வழியாக பிரபாகரனுக்குச் செய்தி அனுப்பிய திரு. இராசீவை புலிகள் கொலை செய்து மாபெரும் எதிர்ப்பைச் சந்தித்திருப்பார்களா? 4. சிரிபெரும்பத்தூர் நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட்டது முதல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து காங்கிரசுத் தலைவர்கள் விலகிக் கொண்டதும், எந்த ஒரு காங்கிரசுத் தலைவரும் அதில் சாகவில்லை போன்ற செய்திகளெல்லாம் நமக்குச் சொல்வது என்ன? அதே வேளையில் இராசீவ் கொலையாளிகள் காங்கிரசுத் தலைவர் மரகதம் சந்திரசேகர் வீட்டில் தங்கியிருந்ததும் உண்மையில்லையா? 5. இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகள் விடை காணமுடியாமல் தத்தளிக்கும் நேரத்தில் ஓர் அவசியமான வினாவையும் நாம் எழுப்புவது நல்லது. கொலையின் மூலம் ஆதாயம் அடைந்தது யார்? இழப்புகளை சந்தித்தது யார்? பதவியும் ஆட்சியும் யாருக்குக் கிடைத்தது? தடையும் பின்னடைவும் யாருக்கு ஏற்பட்டது? இதையெல்லாம் கணக்குப் போடாமலா காய்கள் நகர்த்தப்பட்டன? இன்றைக்கு ஒட்டு மொத்தத் தமிழினமும் ஈழத்தில் நடக்கும் போராட்டத்திற்குப் பின்னணியில் திரண்டு நிற்கிறது. ஆனால், காங்கிரசுக் கட்சி, தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமை ஆகியனவே இன்று எதிர்ப்பாகவும் இரண்டகம் செய்து கொண்டும் குறுக்குச்சால் ஓட்டிக்கொண்டும் நிற்கின்றன. இந்த எதிர்ப்பிற்கும் இரண்டகத்திற்கும் புலிகளைக் காரணம் காட்டுகின்றனர். தன்னுடைய போராளிகளில் 25000 பேரின் உயிரை ஈகம் செய்தவர்களை வன்முறையாளர்கள் என்று அறிவித்துக் கொண்டு ஒரு இலக்கம் அப்பாவித் தமிழர்களைக் காவு கொண்ட சிங்களப்படைகளோடு இந்தியா கொஞ்சிக் குலவி நம் வரிப்பணத்தில் ஆயுதங்கள் கொடுக்கிறது. எந்த ஊர் ஞாயம் இது? ஈழப் போராட்டம் வெறும் ஈழத் தமிழரின் போராட்டம் என்றோ அல்லது விடுதலைப் புலிகளின் போராட்டம் என்றோ குறுக்கிப் பார்த்த மடமை என்றோ ஒழிந்து விட்டது. தமிழர் என்கிற மூத்த இனத்திற்கு உலகெங்கும் அடி, உதை, புறக்கணிப்பு என்று பன்னெடுங்காலமாகவே நடந்து வருகிறது. பர்மாவிலிருந்து விரட்டப்பட்டோம். மலேசியாவில் இன்றும் அடி உதை படுகிறோம். சிங்கப்பூரில் அடக்குமுறைகளைச் சந்திக்கிறோம், கர்நாடகத்தில் கொல்லப்பட்டோம், விரட்டப்பட்டோம், மணிப்பூரிலிருந்து விரட்டப்பட்டோம், மும்பையிலிருந்து விரட்டப்பட்டோம், தமிழகத்திற்குள்ளும் ஆட்சியிழந்து அடிமையினமாக இருக்கிறோம், ஈழத்திலும் இலங்கையிலும் கடுமையான சிகல்களை 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சந்தித்து வருகிறோம். சிங்களர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திய கொடுமைகளையும் கொலைகளையும் யாரும் அறயாதிருக்கமாட்டீர்கள். ஒரு லட்சம் தமிழர்களை படுபயங்கரமாக அவர்கள் கொன்றொழித்திருக்கிறார்கள், கற்பழித்திருக்கிறார்கள், கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி நாடு நகரங்களைத் தரை மட்டமாக்கியிருக்கிறார்கள். நோயாளிகளைக் கொல்கிறார்கள், குழந்தைகளைக் கொல்கிறார்கள்! மறுபுறத்தில் இராணுவத்தோடும் துரோகக் கும்பல்களோடும் மட்டுமே விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள். யார் வன்முறையாளர்கள்? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தந்தை செல்வா போன்றவர்கள் அறவழியில்தான் போராடினார்கள். ஆனாலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நசுக்குதலும் கொலைகளும் இன அழிப்பும்தான் தமிழர்களுக்குப் பரிசாகக் கிடைத்தது. உலகிலுள்ள மற்ற தமிழர்கள் அடக்குமுறையைச் சந்தித்தபோது அடங்கிப் போனார்கள். ஈழத் தமிழர் மட்டும் 25 ஆண்டுகள் பொறுமை காத்த பிறகு திருப்பி அடிக்கத் தொடங்கினார்கள், தனி நாடு கேட்டார்கள். அவர்கள் பிழைக்கப் போனவர்கள் இல்லையே! வந்தாரை வாழ வைத்தார்கள். சிங்களர்களை வரவேற்று வாழ விட்டதும், ஆள விட்டதும் தமிழர்கள்தானே! அவர்களுக்கென்று நாடு இருந்ததே! அதை இழந்த பின்னரும் குடியாட்சியை மதித்து அமைதியாத்தானே வாழ்ந்தார்கள்! காட்டாட்சி கட்டவிழ்த்துவிடப்பட்ட பிறகே அவர்கள் போரிடத் தள்ளப்பட்டார்கள். இழந்த அவர்களுடைய சொந்த நாட்டை அவர்கள் மீட்டு எடுக்க முயல்வது தவறா? யூதர்களும் பாலத்தீனியரும் வங்காளிகளும் தத்தமது நாட்டை மீட்டெடுத்தது சரி என்றால் ஈழத் தமிழரின் தனி நாட்டுப் போராட்டம் மட்டும் எப்படித் தவறாகும்? ஏன் தில்லிக்குக் கசக்கிறது? நாம் இந்திய நாட்டுக்குள் இருந்தாலும் பல தேசிய இனங்களாக இருக்கிறோம். காவிரிப் பிரச்சனை என்று வந்துவிட்டால் நாடு, கட்சி, சாதி என்று எதையும் பாராமல் கன்னடர்கள் கன்னடர்களாத்தானே நிற்கிறார்கள். தமிழகத்திற்குக் காவிரியின் மீது என்ன உரிமை இருந்தாலும் அவர்கள் கிஞ்சித்தும் அவைகளை நினைப்பதில்லை, மதிப்பதில்லை என்பதைப் பார்க்கிறீர்களா? மலையாளிகளைப் பாருங்கள். தமிழ்நாட்டோடு ஒரு பிரச்சினை என்றால் கட்சித் திரைகளைக் கழற்றிவிட்டு மலையாளியாக ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மராத்தியத்தில் அவர்களின் தேசிய உணர்வைப் பாருங்கள்! தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கு. 1956ல் தேவிகுளம் பீர்மேட்டை நாம் கேரளாவிடம் இழந்தபோது, காமராசர்கூட, “மேடு போனால் என்ன? பள்ளம் வந்தால் என்ன? எல்லாம் இந்தியாவிற்குள்தானே இருக்கிறது” என்று விரிந்த மனதோடு பேசினார். இன்றும் காங்கிரசாரில் பலர் அப்படியே இருக்கிறார்கள். வடவர்களும் வங்காளிகளும் இதை நல்ல இளிச்சவாய்த்தனம் என்றே நினைக்கிறார்கள். தில்லியை ஆளும் பிராமணர்களுக்கு இந்தியா என்கிற கொட்டடி வேண்டும். மக்களுக்குத் தேசிய ஓர்மை வந்துவிடக்கூடாது என்று கருதுகிறார்கள். காரணம், அது நேர்ந்தால் அவர்கள் தலையில் அது இடியாய் இறங்கிவிடும். தேசியங்கள் முதன்மைப்பட்டுவிட்டால் பிராமணனைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இத் துணைக்கண்டத்தில் மண்ணுரிமை இருக்கும். அவர்களுக்கு இருக்காது. இதுதான் அவர்களை வாட்டும் நெருப்பு. இதை அறியாது இன்று பலிக்கடா ஆக்கப்பட்டிருப்பவர்கள் அப்பாவித் தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தொண்டர்கள். காவிரி பாயும் டெல்டா பகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு மணிசங்கர ஐயர்வாள்! 1999ல் சென்னையில் ஒரு கூட்டத்தில் காவிரி பற்றி தமிழ்நாட்டு ஞாயங்களை அழுத்தமாகப் பேசினார். உடனே, இதையே நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என்று சொன்னபோது, “நான் காங்கிரசுக்காரன், கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி நடக்கிறது. நான் எப்படி பேச முடியும்? அ.தி.மு.க.வினரைப் பேசச் சொல்லுங்கள்!” என்று சொல்லிக் கைகழுவி விட்டார். ஆக, இவர்களைப் போன்ற தலைவர்களுக்கு பதவிக்காக வாக்கு தேடும்போதுமட்டும் தமிழ்நாடு வேண்டும், தமிழர்கள் வேண்டும்! பின்னர் இந்தி தேசியப் பிறங்கடைகளாக மாறிவிடுவார்கள். ஆனால், கர்நாடகக் காங்கிரசோ, கேரளக் காங்கிரசோ, ஆந்திரக் காங்கிரசோ இப்படியா நடக்கிறது? தமிழ்நாடு காங்கிரசு மட்டும் அடிமைக் காங்கிரசாக ஆக்கப்பட்டு கிடக்கிறது! அடக்கித்தான் வாசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது! தமிழர்களாக இருந்தாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவியாலா நிலைக்கு அவர்கள் குரல் நெரிக்கப்படுகிறது! வேறு வழியின்றி ஈகி இரவிச்சந்திரன் போன்றவர்கள் உயிரை மாய்க்கும் அளவிற்குப் போயிருக்கிறது! தமிழ்நாட்டுக் காங்கிரசாரை தில்லிக் காங்கிரசார் முற்றாகக் கைகழுவி விட்டார்கள். இதை இப்போதாவது தமிழக காங்கிரசார் உணர்ந்து கொண்டு தங்கள் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுகிறோம். காமராசர், மூப்பனார் போன்றவர்களின் காலத்தில் தமிழக காங்கிரசாரை தில்லி புறக்கணித்தது என்பது ஒரு விதம். காரணம், அப்போதும்கூட தில்லி நினைத்தது, “தமிழகத்தில் காங்கிரசு உயிர்த்தெழ ஒரு வாய்ப்பிருக்கலாம்” என்று! ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க., ச.ம.க., போன்ற கட்சிகள் வந்திருக்கின்றனவே தவிர காங்கிரசு துளிர்த்தெழுவதற்கான வாய்ப்பே இல்லை என்பது புலனாகிவிட்டது. அடுத்து தமிழ்நாடு காங்கிரசுக்குள் இருக்கும் பூசல்களும் பிரிவுகளும் எண்ணற்றவை. அவைகளைச் சரிக்கட்டிக் கொண்டுவருவது என்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பது போல என்றாகிவிட்டது. இவ்விரு காரணங்களும் தில்லி காங்கிரசுக்குத் தெரியாமல் இருக்குமா? தமிழ்நாடு காங்கிரசில் இருக்கும் தமிழர்களின் உணர்வைக் குப்பையென நினைத்து தில்லிக் காங்கிரசு அதிலும் குறிப்பாக சோனியா அவர்கள் எடுத்த ஈழ நிலைப்பாட்டின் பின்னணி இதுதான். கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆட்சியேறும் வாய்ப்பு இருப்பதால் கன்னடர்களுக்கு எதிராக தில்லி ஒருக்காலமும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்காது. காவிரிப் பிரச்சனையில் எடுத்திருக்கிறதா? காவிரிக் கலவரம் பற்றி எடுத்திருக்கிறதா? ஆனால், தமிழகத்தில் நம்பிக்கையே இல்லாத நிலையில் முற்றாகக் கை கழுவி விட்டது தில்லிக் காங்கிரசு! உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழ் மக்களும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த தமிழர்கள் மட்டும் ஏன் விலகி நிற்க வேண்டும்? உள்ளத்தில் கொதிப்பையும் குமுறலையும் அடக்கிக் கொண்டு ஏன் தமிழர்களிடமிருந்து இவர்கள் விலகி நிற்க வேண்டும்? தமிழ்நாட்டு காங்கிரசுத் தலைமைகூட தமிழர்களிடமா இருக்கிறது? ஈ.வி.கே.எசு. இளங்கோவன், தங்கபாலு, சுதர்சனம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஞான தேசிகன், மணிசங்கரஐயர் போன்ற தமிழரல்லாதவர்கள் வைத்ததுதானே அங்கு சட்டமாகயிருக்கிறது! வாசன் எங்கே? குமரி அனந்தன் எங்கே? சிதம்பரம் எங்கே? பீட்டர் அல்போன்சு எங்கே? பதவிகள் சில கொடுத்து வாயடைத்து வைத்திருக்கிறார்கள். கிருஷ்ணசாமியை மொத்தமாக ஓரம் கட்டிவிட்டார்கள். தில்லிக் காங்கிரசு தமிழ்நாடு காங்கிரசை குப்பை என்று கருதிவிட்டால் அந்தக் குப்பைக்குள்ளும் வந்தேறிகளின் கொட்டம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. மானமுள்ள தமிழர்கள் காங்கிரசை விட்டு இன்றே துணிவுடன் விலகுவது தமிழினத்திற்கு நீங்கள் செய்யும் மாபெரும் தொண்டாகும். தமிழர் கட்சிகள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளில் சேருங்கள். மூழ்கும் கப்பலைச் சுற்றி முன்னூறு கப்பல்கள் உங்களை வரவேற்க அணிவகுத்து நிற்க ஏனப்பா நீயும் மூழ்கித்தான் சாக வேண்டுமோ? ஏன், தெலுங்கர்கள் விலகினால்கூட விஜயகாந்து கட்சியில் சேரலாமே! நாம், நம் இனம், நம் நாடு என்று இணைவோம்! அப்படித்தானே கன்னடரும், தெலுங்கரும், மலையாளியும் நிற்கிறார்கள்! ஈனம் அழிப்போம்! மானம் காப்போம்! தமிழர்களம் தமிழர்நாடு

Thursday, January 29, 2009

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி முத்துக்குமரன் மரணம்

தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ம‌த்‌திய அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு இ‌ன்று காலை 10 ‌லி‌ட்ட‌ர் ம‌ண்எ‌‌ண்ணெ‌ய் கேனுட‌ன் வ‌ந்து‌ள்ளா‌ர்.‌திடீரென, ''ஈழத்தமிழர்களை வாழ்த்தி கோஷமிட்டும், அவர்களை காப்பாற்ற கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து கோஷமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை பா‌ர்‌த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனா‌ல் அ‌ந்த பகுதி‌‌யி‌ல் பெரு‌ம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி மரணமடைந்தார். தீ‌க்கு‌‌‌ளி‌த்து இற‌ந்த முத்துக்குமரன், செ‌ன்னை கொள‌த்தூ‌‌ர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவி‌ல் வ‌சி‌த்து வ‌ந்து‌ள்ளா‌ர். இவரது சொ‌ந்த ஊ‌ர் தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் பு‌லியந‌ல்லூ‌ர் எ‌ன்ற ‌கிராம‌ம் ஆகு‌ம். 'மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர், 'பெண்னே நீ என்ற நிகழ்ச்சி தொகுப்பளாரும் தயாரிப்பாளரும் ஆவார்

Friday, January 16, 2009

விதவையான வெள்ளைத்தாள்....!

விதவையான வெள்ளைத்தாள்....!
உண்மைக்குத் திரையும் பேனாக்களுக்கு சிறையும் போட்டாயிற்று...! கைவிலங்குகளில் தூக்குப் போடும் கரங்கள். முகவுரை எழுத முன்னமே முடிவுரை கேட்கும் அரசியல் இப்படித்தான் இங்குள்ள நிலமை ... எங்கள் தாள்கள் வெள்ளையாக இருப்பதையே இவர்கள் விரும்பித் தொலைக்கிறார்கள்மீறி எழுதினால் எங்களின் தாலிக்குரியவர்கள் வெள்ளைச் சேலையிலே உலாவருவார்களென சபிக்கிறார்கள். குற்றங்களைக் காட்டலாம் ஆனால் குற்றவாளிகளை சுட்டக்கூடாது தவறினால் மைக்குப் பதிலாக பேனாக்களின் வாய்கள் இரத்தமே சிந்தும். கலீலியோ போலவே சரியானதை பிளையென்று ஏற்க்கும் பெருந்தன்மை இங்கே தேவையாயிருக்கிறது. இல்லையெனின் பேனாவுக்குள்ளே ஊற்றப் பட்டிருக்கும் உயிர்க் காற்று வெளியே கசிந்துவிடுகிறது....

பண்பாடும் வீரத்திருநாள்

பண்பாடும் வீரத்திருநாள்
நேற்றைய உதயத்தைவிட இன்றைய விடியல்தான் வித்தியாசமான உதயமகிழிக்கப்படும் தினக்குறிப்பிலவருகின்ற நாட்களைவிட இன்றையநாள் கருவூலமானது காலவாதியான அட்டவணையில் கடந்துபோன காலத்தைவிட பிறக்கின்றநாள் விபரமானது இரவின் விழிப்பிற்காயஎழுகின்ற கதிரவனைவிட இன்றைய பகலவனுக்கு செலுத்தும் முதல்மரியாதை பசிக்கயிற்றில் பம்பரமாகிய ஏழைகள் முற்றத்திலகாளைகள் ஏற்றத்தில் சீறுவானச் சிரிப்பில் சீனவெடியின் களிப்பிலமுகிழ்தெழும் உன்னதநாள்கண்ணீர் வெள்ளத்திலிருந்து கரைசேரத் துடிக்கும்மக்கள் கரும்பின் தித்திப்பிலதிளைத்து இன்பவெள்ளததில்சுற்ற்ம்சூழ சொக்கும்நாள் ஏர்களம் போர்க்களமாடும் கச்சனைவாய் கக்கியநெருப்பின் சாம்பல்மேட்டில் தைமகள் முத்தமிழ் முழங்கிட அகத்தையும் புறத்தையும் எட்டுத்திக்கும் அதிர்ந்திட நடனமாடி உழைப்பவர் தலைகளில் கீரிடம்வைத்து பண்பாடு பண்பாடும்நாளவளையல்கள் குலுங்கிய கரமேந்திய சுடுபொறியால் புத்தடுப்பில் நெருப்புமூட்டி கழுத்தில் தொங்கிடும் தாலியை புதுப்பானை கழுத்தில் கட்டியாடி

Monday, January 5, 2009

கிளிநொச்சி இலங்கை வசம்! கருணாநிதி காங்கிரசார் வசம்!

சில ஆயிரம் சதுர கிலோமீட்டரைப் பிடிக்க இலங்கை ராணுவத்திற்குப் பின்னால் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா என ஏழு நாட்டு ராணுவத் தளபதிகள் இருந்தார்கள். தென்கிழக்கின் வலிமையான பல அடியாட்கள் இலங்கை ராணுவத்துக்கு துணை நின்றார்கள். அப்படியும் பேரிழப்புகளோடுதான் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டிருக்கிறது; இல்லை புலிகள் கிளிநொச்சியை முன்நோக்கி நகர்த்தி வைத்திருக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இதில் தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தமிழகத்துக்குத்தான். ஏனென்றல் ஆறரை கோடி தமிழ் மக்களும் ஈழத்தின் மீதான இலங்கை அரசின் போரை நிறுத்தக் கோரினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியும் பல விதமான கவிதைகள், உணர்ச்சிக் கதையாடல்கள் மூலம் மத்திய அரசிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் கருணாநிதியின் எல்லாக் கோரிக்கைகளையும் தூக்கி குப்பையில் வீசி எறிந்து விட்டு இலங்கைக்கு ராணுவ ரீதியாக தான் செய்யும் உதவிகளுக்கு கருணாநிதியிடம் ஒப்புதலும் வாங்கிச் சென்று விட்டது இந்திய மத்திய அரசு.
ஒரு கட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூட குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அதே சமயம் என் வாழ்நாளில் ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லையே என்ற புலம்பல் வார்த்தைகளை வேறு உதிர்த்தார். கடைசியில் டில்லிக்குப் போய் பிரணாப் முகர்ஜியையாவது இலங்கைக்கு அனுப்புங்கள் என்ற கோரிக்கையை வைத்து விட்டு அமைதி காத்தார். வழக்கம்போல மத்திய அரசு அதையும் குப்பையில் வீச திமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி பிரணாப்முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தோடு திமுகவும் அதன் தலைவரும் முடங்கிப் போனார்கள். ஒரு பக்கம் பதவி ஆசை. இன்னொரு பக்கம் காங்கிரஸை சமாளிப்பதற்கான புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் என இரண்டு பக்கமும் நாடகமாடி எந்த மேடையிலும் சோபிக்காமல் வசனமும் எடுபடாமல் இன்று புலம்பித்திரிவதைத் தவிர இந்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருக்கு வேறு வழியில்லை.
இவரைப் போன்ற ஒரு பெரும் நாடகக்காரர்தான் டாக்டர் ராமதாசும். மத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டு ஈழ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்காமல் பழியை எல்லாம் திமுக மீது சுமத்தி விட்டு தந்திரமாக நடந்து கொள்கிற ராமதாசும் கருணாநிதியும் ஒரே மேடையில் இணைந்து நடித்தால் நாடகம் சுவராஸ்யம் கூடக் கூடும். இன்று கிளிநொச்சி ராணுவத்தினர் வசமாக இவர்களின் பதவி ஆசையும் கொள்கை வீழ்ச்சியுமே காரணம். இவர்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று நிச்சயமாக சொல்ல முடியும்; அல்லது மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை ராணுவ ரீதியாக பலமிழந்தாவது போயிருக்கும்.
2002-ல் புலிகளின் முற்றுகைக்குள் ஆனையிறவில் பல்லாயிரம் சிங்களத் துருப்புகள் சிக்கிக் கொண்டபோது இந்தியா தலையிட்டுதான் இலங்கை ராணுவத்தினரைக் காப்பாற்றியது. அது போல இன்று பாசிச இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்துகிற போரை நிறுத்தச் சொல்லுகிற இந்தியா ஒப்புக்குக் கூட இலங்கையில் போரை நிறுத்த சொல்லவில்லை. மாறாக அது மீண்டும் மீண்டும் சொன்னது, 'அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது' என்று. அதே சமயம் தனது ராணுவத் தளபதிகளை இலங்கை கள முனைக்கு அனுப்பி, கிளிநொச்சிப் போரை வழி நடத்தியது. மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என்று சொன்ன கருணாநிதியும் நிவாரணப் பொருட்களில் அக்கறை காட்டும் மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ராமதாசும் இந்திய அரசின் இலங்கை மீதான ஆர்வத்தை மறைமுகமாக ஆதரித்து நின்றார்கள் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. வன்னி மீதான படையெடுப்பில் அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்கிற மகிந்தாவின் வார்த்தைகளை கருணாநிதி நம்பித் தொலைக்கிறாரோ என்னவோ?
ஈழம் பற்றி தமிழகத்தில் பேசுவதை எல்லாம் புலிகள் பற்றிய பேச்சாக மாற்றுவதன் மூலம் கருணாநிதியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. காங்கிரசாரை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்கிற கருணாநிதி இந்தச் சீரழிவுகளுக்கு இறுதியில் வந்து சேர்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு பக்கம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிக் கொல்கிற காட்சிகள் நம் தூக்கத்தைக் குலைக்கிற அதே வேளையில் போரில் இறந்த பெண் புலிகளின் உடலை பாலியல் ரீதியில் வன்முறை செய்கிறதைப் பற்றி என்ன சொல்ல? உயிரற்ற உடலைக் கூட வெறி கொண்டு நோக்கும் போது நாம் அந்த பெண்ணுடல்களின் பால் மீறப்பட்ட பாலியல் உரிமை குறித்து மௌனம் சாதிக்கத்தான் வேண்டுமா? அவர்களை புலிகளாகப் பார்ப்பதா ஈழத் தமிழ் பெண்களாகப் பார்ப்பதா? என்கிற கேள்விகளை எல்லாம் கருணாநிதியிடம் அல்ல சோனியா காந்தியிடமும் ப்ரியங்காவிடமுமே நாம் கேட்க வேண்டும். மற்றபடி கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு பெருங்கவலைகள் கொள்ள ஏதும் இல்லை. போரில் இவ்விதமான நடவடிக்கைகளை, இழப்புகளை, துரோகங்களை புலிகள் முன்னரும் சந்தித்திருக்கிறார்கள்.
கடைசியாய் ஒரு சிறு குறிப்பு
கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் ராஜிநாமா நாடகங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவர்களும் மத்திய அரசும் சேர்ந்து ஈழ விவகாரத்தில் துரோக நாடகங்களைத் தொடருவார்களோ என்று தோன்றுகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியை இலங்கைக்குப் போகச் சொல்லிக் கேட்டது, அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி இழுத்தடித்தது, கிளிநொச்சி இலங்கை ராணுவத்தின் வசம் விழுந்த அன்று ராமதாஸ் இந்திய பிரதமருக்கு பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியது என இதெல்லாம் இவர்கள் கூட்டு சேர்ந்தே செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இனி பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போவார். இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று சொல்வார். இலங்கையும் போரை நிறுத்தி விட்டதாக அறிவிக்கும். நாடகங்கள் வழமைபோல தொடர்ந்து கொண்டிருக்கும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக திரண்ட தமிழகத்தின் எழுச்சியை இவர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீர் விட்டு அணைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் தணல் தண்ணீராலோ கண்ணீர்த் துளிகளாலோ அணையக் கூடியதல்ல.அது சாம்பல் மூடிய நெருப்பு, என்றாவாது எரிந்தே தீரும்...