Thursday, December 18, 2008

பூக்குமா வசந்தம்…

பூக்குமா வசந்தம்…
கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்காத்திருந்தேன் உன் நட்புக்காகஎத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தனதெரியுமா உனக்கு உன்னோடு ஒருவனைப் பார்த்தால்உள்ளம் ஊமையாய் அழுததுநட்பினாலா காதலினாலாவிடை தெரியா வினாக்கள் என்னுள் விளையாடி ஒய்ந்தன என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டதுஉந்தன் வெட்கம் தானடி நான் தீர்மானித்து விட்டேன்என்னுள் இருப்பது நட்பல்லவடி அது நிச்சயமாய் காதல் தான் உன்னிடம் என் காதலைச் சொல்லஓராயிரம் தடவை முயன்று விட்டேன்விளைவு விபரீதம் ஆகிஉன் நட்பும் என்னை பகைத்து விட்டால்முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது யாரும் அறியாமல்ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்என் எண்ணம் உன்னை எட்டும்அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காகபூக்குமா என் வாழ்விலும் வசந்தம்

No comments: