Thursday, December 18, 2008

அவள்...!!!

அவள்...!!!
பிறக்கும் போதுபுரியாத பல முகங்கள்அழுதுகொள்வேன்அணைத்துக் கொள்வாள்.....அவள்...!தட்டித் தடவிதவளும் போதும்எட்டிப் பாதங்கள் பதிக்கும் போதும்தடக்கி வீழ்வேன்தாங்கிக் கொள்வாள்......அவள்...!கண்கள் விழிக்க வைத்துகதைகள் கேட்ட போதும்உள்ளே இருக்கையிலேஎட்டி உதைத்த போதும்சற்றும் சலிக்காமல்-எனைவருடி வளரவைத்தாள்...... அவள்...!காய்ச்சல் வந்து படுக்கும் போதும்கற்கள் முட்கள்தைக்கும் போதும்எனது நோயால்தானே நோவுறுவாள்.....அவள்...!முற்றத்து மண்ணில்சுண்டுவிரல்- தான் - பிடித்து''அ'' எழுதச் சொல்லித்தந்தமுதல் ஆசிரியை....அவள்...!ஆம்.....கண்கண்ட தெய்வம் அவள் !கற்பிக்கும் ஆசான் அவள் !பத்துமாதம் மடியிலும்மிச்சக்காலம்மனதிலும் சுமக்கின்றதாய் அவள்..!

No comments: